sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர் குறித்து வி.சி., விமர்சனம்

/

கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர் குறித்து வி.சி., விமர்சனம்

கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர் குறித்து வி.சி., விமர்சனம்

கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர் குறித்து வி.சி., விமர்சனம்


ADDED : பிப் 12, 2025 08:07 PM

Google News

ADDED : பிப் 12, 2025 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தி.மு.க.,வுடனான கூட்டணி பங்கீட்டில், கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாவலன் அறிக்கை:

பிரசாந்த் கிஷார் - விஜய் சந்திப்பு, என்ன வேடம் கட்டினாலும், ஆட்டம் எடுபடாது. வியூகம் என்பது கொரளி வித்தை. தேர்தல் வியூகம் என்பதெல்லாம் ஒரு மாயை. வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர், பீஹார் தேர்தலில் பல தொகுதிகளில், 'டிபாசிட்' தொகையை கூட பெற முடியாமல், அதள பாதாளத்தில் தலை குப்புற கவிழ்ந்த வியூக வண்டி. தேர்தல் வியூகம் என்பது குறுக்கு வழி; மக்களை ஏமாற்றும் வழி; ஜாதி அடிப்படையிலான ஓட்டுகளை நியாயப்படுத்தும் வழி.

கடந்த, 2021ல் தி.மு.க., வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் காரணம் என்றால், 2024 லோக்சபா தேர்தல் வெற்றிக்கு யார் காரணம்? வியூகம் என்பது ஒன்றும் கிடையாது. வேலையில்லா இளைஞர்களை வைத்து கொண்டு, கட்சிகளிடம் பணம் பறிக்கும் வேலை.

தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுகிறது என்றால், கொள்கை சார்ந்து வலுவான கூட்டணி அமைத்தது தான் காரணம். தி.மு.க., கூட்டணி கட்சிகளில் காங்கிரசை தவிர, மற்ற கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஆறு தொகுதிகளுக்கு மேல் கொடுக்கக்கூடாது என, கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்து விட்டு சென்றவர். வியூகத்தை நம்பாமல், கொள்கையோடு மக்களை நாடினால் மட்டும் வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us