sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யாருடன் கூட்டணி என இனி கேட்காதீங்க; தெளிவாகச் சொன்னார் திருமாவளவன்!

/

யாருடன் கூட்டணி என இனி கேட்காதீங்க; தெளிவாகச் சொன்னார் திருமாவளவன்!

யாருடன் கூட்டணி என இனி கேட்காதீங்க; தெளிவாகச் சொன்னார் திருமாவளவன்!

யாருடன் கூட்டணி என இனி கேட்காதீங்க; தெளிவாகச் சொன்னார் திருமாவளவன்!

35


ADDED : நவ 05, 2024 12:11 PM

Google News

ADDED : நவ 05, 2024 12:11 PM

35


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் இருக்கும். இனி யாருடன் கூட்டணி என்று எங்களிடம் கேட்காதீர்கள் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

திருச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கட்சி, கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்வை. ஏற்கனவே நாங்கள் தொடர்ந்து 7 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் வெற்றிகரமாக இருக்கிறோம். அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணியில் உள்ளோம்.

இந்த இரண்டு கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கு பங்கு உள்ளது. எனவே நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், அதை வெற்றிகரமாக முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தான் எங்கள் கவனம் இருக்கிறது.

இந்த கூட்டணியை விட்டுவிட்டு, வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை இல்லை. இதை பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். வேண்டும் என்றே, திட்டமிட்டே விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எங்களின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு எங்கிருந்து எழுந்தது.

யாரோ எவரோ போகிற போக்கில் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி, சந்தேகத்தை எழுப்புவது ஏற்புடையது அல்ல. அதை 100 விழுக்காடு நான் மறுக்கிறேன். 2026ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் தி.மு.க., கூட்டணியில் தான் இடம்பெறும். இதில் கேள்விக்கே இடமில்லை, இனி யாரும் அப்படி ஒரு கேள்வியை எழுப்ப வேண்டாம்.

டிசம்பர் 6ம் தேதி புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்கிறேன் என்பது ஓராண்டுக்கு முன்பே எடுத்த முடிவு. விழாவில் பங்கேற்க இசைவு அளித்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி இந்த புத்தகம் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

ஏப்ரல் 14ம் தேதி வெளியீடு நடைபெறுவதாக இருந்திருந்தால் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று வெளியீட்டாளர்கள் சொல்லி இருந்தார்கள். ராகுல் காந்தியையும் அழைக்கிறோம் என்று திட்டமிட்டு இருந்ததாக கூறி இருந்தனர். என்னிடமும் புத்தகத்துக்காக கட்டுரை கேட்டிருந்தார்கள். ஆகவே இந்த புத்தக வெளியீட்டு விழா இப்போது முடிவானதல்ல.

முதல்வருக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்கள் என எனக்கு தகவல் சொல்லப்பட்டு இருந்தது. இப்போது ஒருசில வாரங்களுக்கு முன்பு, த.வெ.க., மாநாடு நடைபெறுவதற்கு முன்பு விஜயை அழைக்க இருக்கிறோம், அவர் வருவார் என்று தகவல் சொன்னார்கள். ரஜினிகாந்தும் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல் சொன்னார்கள். இப்படித்தான் எங்களிடம் சொல்லப்பட்டது. நாங்களும் அதற்கு இசைவு அளித்திருந்தோம்.

இப்போது நடிகர் விஜய் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி அதை நாங்கள் முடிவு செய்வோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.






      Dinamalar
      Follow us