sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் கண்டனம் உச்ச நீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு

/

கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் கண்டனம் உச்ச நீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு

கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் கண்டனம் உச்ச நீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு

கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் கண்டனம் உச்ச நீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு


ADDED : அக் 05, 2025 02:11 AM

Google News

ADDED : அக் 05, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில், த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை அணுக, விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப். 27ம் தேதி, கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது, தமிழகத்தையும் தாண்டி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது திட்டமிட்ட சதி என்று, த.வெ.க., கூறி வருகிறது. ஆனால், இதற்கு த,வெ.க.,வும், விஜய்யும் தான் பொறுப்பு என, தி.மு.க.,வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் துயரத்தை சுட்டிக்காட்டி, அரசியல் கட்சி தலைவர்களின், 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், கரூர் துயரம் தொடர்பாக, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார்.

அத்துடன், 'விஜய் பயணம் செய்த பஸ் மீது, இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்ட​ வீடியோ வெளியகியுள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யாதது ஏன். விஜய் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா.' என, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதி, 'கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு, விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளனர்.

அவர்களுக்கு தலைமைப் பண்பு இல்லை' என்றும் கண்டனம் தெரிவித்தார்.

இதனால், விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும், விஜய் மீது வழக்கு பதியவும், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கும் என, விஜய் தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும், தமிழக காவல் துறை செய்த தவறுகளை ஆதாரங்களுடன் தெரிவிக்க இருப்பதாகவும், த.வெ.க.,வினர் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us