ADDED : ஜூலை 08, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமாரை, போலீசார் அடித்து கொலை செய்தது, தமிழகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு த.வெ.க., தலைவர் விஜய், நேரில் வந்து ஆறுதல் கூறினார். அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். உடல்நலம் குன்றியதால், மருத்துவமனையில் நவீன்குமார் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தகவலறிந்த விஜய், நவீன்குமாரை நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.