sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசுகிறார்: பழனிசாமி

/

தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசுகிறார்: பழனிசாமி

தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசுகிறார்: பழனிசாமி

தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசுகிறார்: பழனிசாமி


ADDED : மார் 29, 2025 06:33 PM

Google News

ADDED : மார் 29, 2025 06:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:'தி.மு.க., - த.வெ.க., இடையே போட்டி' என, நடிகர் விஜய் பேசியது குறித்து, பழனிசாமியிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு தலைவரும் கட்சி வளர்ச்சி, தொண்டர்களை உற்சாகப்படுத்த, இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பர்; தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி, அ.தி.மு.க., தான்,'' என்றார்.

சேலம் மாவட்டம், ஓமலுாரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அளித்த பேட்டி:

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தொடர் கதையாகி உள்ளன. அரசு மெத்தனமாக செயல்படுகிறது. ஸ்டாலின் திறமையற்ற முதல்வராக உள்ளார். இவற்றையெல்லாம் தடுக்க, சட்டசபையில் பேச முயன்றால், அனுமதி மறுக்கப்படுகிறது. திட்டமிட்டே வெளியேற்றப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம், 'வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி' என, நடிகர் விஜய் பேசியிருக்கிறாரே என கேட்டதும், ''அது அவரது கருத்து. ஒவ்வொரு தலைவரும் கட்சி வளர்ச்சி, தொண்டர்களை உற்சாகப்படுத்த, இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பர். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி, அ.தி.மு.க., தான் என்பதை மக்களே ஏற்று, அதற்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர். இதில் யாருக்கும் மாற்று கருத்து தேவையில்லை,'' என்றார்.

முன்னதாக, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் முன், நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. பழனிசாமி நீர், மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு வழங்கினார்.






      Dinamalar
      Follow us