sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய யாத்திரை முடித்து காஞ்சி திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; பக்தர்கள் உற்சாக வரவேற்பு

/

விஜய யாத்திரை முடித்து காஞ்சி திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; பக்தர்கள் உற்சாக வரவேற்பு

விஜய யாத்திரை முடித்து காஞ்சி திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; பக்தர்கள் உற்சாக வரவேற்பு

விஜய யாத்திரை முடித்து காஞ்சி திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; பக்தர்கள் உற்சாக வரவேற்பு

4


ADDED : மார் 20, 2024 07:45 PM

Google News

ADDED : மார் 20, 2024 07:45 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இன்று (20ம்தேதி) காஞ்சிபுரத்திற்கு வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2022 மார்ச் மாதம் விஜய யாத்திரை புறப்பட்டு, ராமேஸ்வரம், ஆந்திரா, தெலங்கானா, காசி, உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு விஜயம் செய்தார். அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்று அருளாசி வழங்கினார். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் ஜோதிர்லிங்க க்ஷேத்திரமான மல்லிகார்ச்சுன சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார்.

திருப்பதியில், சந்திர மவுலீஸ்வர பூஜை செய்து கொண்டு, அதன் தொடர்ச்சியாக விஜய யாத்திரை புரிந்து, இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு திரும்பினார். சுவாமிகளுக்கு காஞ்சி சங்கர மடம், காஞ்சி நகர வரவேற்பு கமிட்டி சார்பிலும், நகரவாசிகள், பல்வேறு ஆன்மிக அமைப்புகள், திருக்கோவில் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல்வேறு திருக்கோவில்களில் பிரசாதங்களுடன் பூரண கும்ப மரியாதை, மங்கல வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீபெரியவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நகர பவனி ஊர்வலம் நடந்தது. மடம் திரும்பிய சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரையும், பிரசாதமும் வழங்கினார்.






      Dinamalar
      Follow us