sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் தி.மு.க., - அ.தி.மு.க., திகில்

/

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் தி.மு.க., - அ.தி.மு.க., திகில்

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் தி.மு.க., - அ.தி.மு.க., திகில்

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் தி.மு.க., - அ.தி.மு.க., திகில்


ADDED : ஜூன் 23, 2025 03:39 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை, போலீஸ் கெடுபிடிக்கு இடையில், மாநிலம் முழுதும் அவரது கட்சியினர் கொண்டாடினர்.

பிறந்த நாளையொட்டி, விஜய்க்கு பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை, பா.ஜ., மாநிலத் தலைவர் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு இணையாக த.வெ.க.,வினர், விஜய் பிறந்த நாளை மாநிலம் முழுதும் கோலாகலமாக கொண்டாடினர். பல இடங்களில் கேக் வெட்டி, இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் கெடுபிடியுடன் இந்நிகழ்ச்சிகள் நடந்தன.

சென்னை, சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

அடையாறு ஆரம்ப சுகாதார மையத்தில் பிறந்த 25 குழந்தைகளுக்கும், ஈஞ்சம்பாக்கம் ஆரம்ப சுகாதார மையத்தில் பிறந்த 10 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம், குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம், புத்தாடைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது ஆனந்த் கூறியதாவது:

எங்கள் தலைவர் பிறந்த நாளை, தொண்டர்கள் மிக சிறப்பாக கொண்டாடினர். பல இடங்களில், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கக் கூடாது என, போலீசார் தடுத்துள்ளனர். உளுந்துார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. தி.மு.க.,வினரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே, ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்; விஜய் வெளியே வரவில்லை. மாலை வரை காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து விசாரித்தபோது, 'சமீபகாலமாக பனையூர் வீட்டில் விஜய் தங்குவது கிடையாது. புதுச்சேரி ஜோதிடர் ஒருவர் ஆலோசனைப்படி, அடையாறில் உள்ள வீட்டில்தான் இருக்கிறார்' என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்படி தமிழகம் முழுதும், விஜயின் பிறந்த நாள் விழாவை த.வெ.க.,வினர் மிகப் பிரமாண்டமாக, கொண்டாடியிருப்பது கண்டு, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

த.வெ.க., தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஈஞ்சம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த குழந்தைக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கினார். அருகில், கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா.






      Dinamalar
      Follow us