sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ., தி.மு.க.,வில் ஐக்கியம்

/

 விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ., தி.மு.க.,வில் ஐக்கியம்

 விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ., தி.மு.க.,வில் ஐக்கியம்

 விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ., தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : டிச 12, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ., செல்வகுமார் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார்.

விஜயிடம் பி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி, விஜய் நடித்த, 'புலி' படத்தை தயாரித்தவர் பி.டி.செல்வகுமார். இவர் தலைமையில் 100 பேர், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நேற்று தி.மு.க., வில் இணைந்தனர்.

பின், பி.டி.செல்வகுமார் அளித்த பேட்டி:

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளுக்கு கட்டடம், போன்றவற்றை கட்டி கொடுக்கிறோம். தனி இயக்கமாக இருந்து, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், தி.மு.க.,வில் இணைந்துள்ளோம்.

விஜய் மக்கள் இயக்கமாக தன்னுடைய ரசிகர் மன்றத்தை நடத்தியபோது, ஒரு துாணாக இருந்தேன். விஜயுடன் ஆரம்ப காலத்தில் இருந்து, தியாகம் செய்தவர்கள் யாரும், அவருடன் இப்போது இல்லை. விஜய் ஒரு நிலவு. ஆனால், அவர் அமாவாசையாகதான் மாற முடியும்.

விஜய் அவரது தந்தைக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஒரு நடிகையை பார்ப்பதற்கு, கூலித் தொழிலாளர்கள், ரசிகர்கள் அனைவரும் வருவர். விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் புரட்சியாளர்கள் என்றோ, அனைவரும் விஜய்க்கு ஓட்டளிப்பர் என்றோ, கனவில் கூட நினைக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us