sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

/

சென்னையில் கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

சென்னையில் கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

சென்னையில் கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்


ADDED : ஜூலை 12, 2025 12:41 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை ஓமந்துாரார் தோட்டம், சிவானந்தா சாலையில், தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியர் கூட்டமைப்பு சார்பில், கிராம சுகாதார செவிலியர்கள் 200க்கும் மேற்பட்டோர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து, கிராம சுகாதார செவிலியர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 3,800 துணை சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

துணை சுகாதார நிலையங்களில், அனுபவமற்ற தற்காலிக பணியாளர்களை தடுப்பூசி போட சொல்கின்றனர். அதற்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

இதன் வாயிலாக, தடுப்பூசி பணியை, தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.

மேலும், வசிக்க தகுதியற்ற, புதிதாக கட்டப்பட்ட நலவாழ்வு நிலையங்களுக்கு, வாடகை பிடித்தம் செய்வதை கைவிட்டு, வாடகையற்ற குடியிருப்பாக மாற்ற வேண்டும்.

கொரோனா காலத்தில் பணியாற்றிவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us