sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊராட்சிகளை இணைப்பதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு; 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

/

ஊராட்சிகளை இணைப்பதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு; 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

ஊராட்சிகளை இணைப்பதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு; 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

ஊராட்சிகளை இணைப்பதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு; 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

2


ADDED : ஜன 06, 2025 01:56 PM

Google News

ADDED : ஜன 06, 2025 01:56 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: ஆனைக்காரன் சத்திரம் மற்றும் கோபால சமுத்திரம் ஊராட்சிகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சி உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணை எண் 24 ரத்து செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் யூனியன் எல்லைக்கு உட்பட்ட ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சியில் உள்ள 14 வார்டுகள், கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள 10 வார்டுகள் என 24 வார்டுகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சியை உருவாக்கும் அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழக அரசு, ஆனைக்காரன் சத்திரம், கோபாலசமுத்திரம் ஊராட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்காமல் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிவிப்பால் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கான 100 நாள் வேலை திட்டம், தொகுப்பு வீட்டு திட்டம் ஆகியவற்றை இழப்பதுடன், கூடுதல் வரி செலுத்தும் நிலையும் ஏற்படும். இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளவர்கள் என்பதால் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, த.மு.மு.க., மூ.மு.க., வி.சி.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி நடந்தது. கொள்ளிடம் யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது பேரணியாக வந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த சீர்காழி பொறுப்பு ஆர்.டி.ஓ., ரவி, டி.எஸ்.பி., ராஜேந்திரன், தாசில்தார் அருள்ஜோதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையிலானோரை யூனியன் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முடிவில் இரண்டு ஊராட்சிகளை இணைத்து பேரூராட்சியாக உருவாக்குவதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தப்படும். மேலும், இரு ஊராட்சிகளிலும் மக்களிடம் கருத்து கேட்ட பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us