ADDED : மே 23, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, வினாடிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கடந்த வாரம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. தற்போது, மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வினாடிக்கு, 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது. மெயின் அருவி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில், தண்ணீர் சீரான அளவில் கொட்டுகிறது.