sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்

/

தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்

தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்

தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்

1


ADDED : மே 25, 2025 08:44 AM

Google News

ADDED : மே 25, 2025 08:44 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பெண்ணையாற்றில் உடைந்த தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் தேங்க வழியின்றி, வீணாக வெளியேறி வருகிறது.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த சின்ன பகண்டை கிராமம், பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது. ஆற்றின் வடக்கு கரையில் விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் உள்ளது.

இவ்விரு பகுதிகளையும் சுற்றியுள்ள விவசாயிகள் பயனடையும் வகையில், தமிழகம்-புதுச்சேரி அரசுகள் ஒப்பந்தம் ஏற்படுத்தி, கடந்த 1972ல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டின.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது இந்த ஆற்றில் தண்ணீர் வரும். அப்போது, சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 8 ஏரிகளுக்கும், புதுச்சேரியின் பாகூர் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்படும். மேலும், தடுப்பணையில் தேக்கப்படும் தண்ணீரால் சுற்றுப்புற பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண்ணையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தடுப்பணையின் நடு பகுதி 200 அடி நீளத்துக்கு உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆற்றில் வந்த தண்ணீர் தேங்க வழியின்றி, முழுதுமாக வெளியேறியது. தடுப்பணையில் உடைந்த பகுதி இதுவரை சீரமைக்கப்படவில்லை. அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால், தற்போது ஆற்றில் வரும் தண்ணீர் உடைந்த பகுதி வழியாக வீணாக வெளியேறுகிறது. எனவே, பருவ மழைக்கு முன், உடைந்த தடுப்பணையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us