ADDED : ஜன 03, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: தமிழக காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி:
சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராடுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்; மறுக்கக்கூடாது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 'சிசிடிவி' கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
எங்களுக்கும் கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளின் விருப்பம் கூட அதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

