sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: காங்., அழகிரி

/

 கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: காங்., அழகிரி

 கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: காங்., அழகிரி

 கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: காங்., அழகிரி


ADDED : நவ 13, 2025 07:03 AM

Google News

ADDED : நவ 13, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது என, என முன்னாள் காங்., மாநில தலைவர் அழகிரி பேசினார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்த மேற்கு மாவட்ட காங்., செயற்குழு கூட்டத்தில், அவர் பேசியதாவது:

பா.ஜ., ராட்சத பலத்துடன் உள்ளது, நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்., அல்லாத முதல்வர்களில் ஸ்டாலின் மட்டுமே கொள்கையுடன் சிறப்பாக செயல்படுகிறார். ஸ்டாலின் நினைத்திருந்தால் பா.ஜ.,வை அரவணைத்து செல்லலாம். ஆனால், அதை தவிர்த்து ராகுலுக்கு துணையாக நிற்கிறார்.

பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பொய் பிரசாரம் செய்கின்றனர். தவறான கருத்துகளை திரும்ப திரும்பச் சொல்லி மக்கள் மனதில் விதைக்கின்றனர். எதிர்மறை கருத்துகளுக்கு அந்த இடத்திலேயே பதிலடி தர வேண்டும். நாம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். ஆட்சியில் பங்குபெற வேண்டும். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல.

முதல்வர் ஸ்டாலின் சிறப்பானவர். அதற்காக கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது. இந்த கூட்டணியை விரும்புகிறேன். அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும். அதுபோல், நாமும் வளர வேண்டும்.

ராகுல் வரலாறு என்ன. அவரை போல அரசியல் வரலாறு கொண்ட நபர்கள் யாராவது உள்ளனரா. கொள்கை தான் அவரது கோட்பாடு. ராகுல் தான் இந்தியாவை வழி நடத்துவார். அதுவரை காங்., கட்சியினருக்கு துாக்கம் வரக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

'பா.ஜ., ஒரு சீட் கூட ஜெயிக்காது'

காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி கூறியதாவது: தி.மு.க., இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட காங்., வெற்றி பெற முடியாது என பா.ஜ.,வினர் கூறுவது, அவர்கள் எங்கள் மீது எவ்வளவு கோபத்தில் இருகின்றனர் என தெரிகிறது. அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியே வந்தால், அவர்களுக்கும் ஒரு ஓட்டு கூட விழாது என்று கூறலாம். நாங்கள் கொள்கை கூட்டணி. கொள்கைக்காக உழைத்து வருகிறோம். கடந்த தேர்தல்களில் நானும் கூறினேன். பா.ஜ., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று. அ.தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், கொஞ்சம் ஓட்டு விழும் என்றாலும், அவர்கள் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us