டப்பா, டோப்பா, டிராமா எல்லாம் எங்களுக்கு தெரியாது
டப்பா, டோப்பா, டிராமா எல்லாம் எங்களுக்கு தெரியாது
ADDED : பிப் 01, 2026 03:12 AM

பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச பாத யாத்திரையாக, விரதம் இருந்து வந்துள்ளோம். பழனிக்கு வரும் பக்தர்கள், சண்முக நதியில் புனித நீராடிச் செல்வது வழக்கம். ஆனால், சண்முக நதிநீர், மிக மோசமாக சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. திராவிட மாடல் அரசு, பக்தர்களுக்கு வசதிகளை செய்து தருவதில்லை. தமிழர்களின் அடையாளம் என்பது, முருகர், விபூதி, கோவில்கள் தான். தமிழகம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு செல்ல முருகபெருமான் அருள் புரிவார்.
மதுராந்தகத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற தே.ஜ., கூட்டணி பிரசாரக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கூடியதால், தமிழகத்தில் உள்ள திராவிட மாடல் ஆட்சியினர் பதற்றத்தில் உள்ளனர். அதனால், சம்பந்தமில்லாமல் டப்பா இன்ஜின் என கூறி வருகின்றனர். 'டப்பா, டோப்பா, டிராமா' என்பது குறித்தெல்லாம் எங்களுக்கு தெரியாது. இதை செய்து கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சிதான்.
- வானதி
தலைவர், பா.ஜ., தேசிய மகளிர் அணி

