sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான்கு 'சீட்' கேட்டுள்ளோம்: திருமாவளவன் தகவல்

/

நான்கு 'சீட்' கேட்டுள்ளோம்: திருமாவளவன் தகவல்

நான்கு 'சீட்' கேட்டுள்ளோம்: திருமாவளவன் தகவல்

நான்கு 'சீட்' கேட்டுள்ளோம்: திருமாவளவன் தகவல்


ADDED : பிப் 13, 2024 07:16 AM

Google News

ADDED : பிப் 13, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க.,விடம் நான்கு லோக்சபா தொகுதிகளை கேட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பட்டியல் அளித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக,தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான பேச்சு, சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரும், வி.சி., கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், எம்.பி., ரவிகுமார், எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பேச்சுக்கு பின், திருமாவளவன் கூறியதாவது: சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு தனி தொகுதிகளை குறிப்பிட்டு, அதில் மூன்று தொகுதிகள் கேட்டுள்ளோம்.

பொது தொகுதிகளில், பெரம்பலுார், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில், ஏதேனும் ஒன்று வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளோம்.

அடுத்தகட்ட பேச்சில், தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் பின்னர் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'ராமநாதபுரமும் ராஜ்யசபா சீட்டும்!'


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், மாநில தலைவர் காதர் மொகிதீன், பொதுச்செயலர் அபுபக்கர், பொருளாளர் ஷாஜஹான் உள்ளிட்டோர், தி.மு.க., குழுவினரிடம் நேற்று பேச்சு நடத்தினர். பின், காதர் மொகிதீன்கூறியதாவது:ஏற்கனவே ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். அதனால், அதே தொகுதியை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்.
கூடுதலாக, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் கேட்டுள்ளோம். முதல்வரிடம் பேசி பரிசீலிப்பதாக, தி.மு.க., குழு கூறியுள்ளது.தொகுதி மாற்றிக் கொடுப்பது குறித்து பேச்சு எழவில்லை. கேட்டிருப்பது ஒரு தொகுதி தான்; அதை தான் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us