sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டசபை தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்படணும்; நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்

/

சட்டசபை தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்படணும்; நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்

சட்டசபை தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்படணும்; நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்

சட்டசபை தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்படணும்; நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்


ADDED : டிச 14, 2025 05:26 PM

Google News

ADDED : டிச 14, 2025 05:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்பட வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதற்கான ஆயத்தப் பணிகளுல் ஒன்றான 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி மாநாடு, BLA-2 பயிலரங்கக் கூட்டம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பற்றிய பயிலரங்கக் கூட்டம் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. டிசம்பர் 13,14,15 மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டங்கள், ஒரே சமயத்தில் நடைபெறுகிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்தையும் வெற்றிகரமாக வடிவமைத்து அதை செயல்படுத்தி வரும் தேசிய SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கமிட்டி உறப்பினர் மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை , மாநில துணைத் தலைவர் உள்ளிட்டோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழக பாஜவிற்கும், தேஜ கூட்டணிக்கும் கிடைத்த வெற்றிக்கான முதல் படி.

அனைத்து BLA-2 பூத் முகவர்களும் இந்த பயிலரங்கக் கூட்டத்தை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டு 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us