தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை கைவிட வேண்டும்: பா.ஜ.,
தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை கைவிட வேண்டும்: பா.ஜ.,
ADDED : ஆக 24, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை: ஆட்சி அமைக்கும் முன், 'தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைத்து, மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக, 20,000 மெகாவாட் உற்பத்தி செய்து குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.
ஆனால் மின் வாரியத்தை நஷ்டத்தில் தள்ளி தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி மக்கள் மீது, நிதிச்சுமையை ஏற்றி வருகிறது. கூடுதல்விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கட்டணஉயர்வுக்கு வழிவகுக்கும். தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

