ADDED : நவ 18, 2025 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஹார் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது. 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில், சிறுபான்மையினர் ஓட்டுகளே அதிகம்.
பீஹார் நிலையே மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் நீடிக்கும் என கணிப்பது சரியல்ல . இங்கே திராவிடம் செதுக்கப்பட்ட மண்.
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு, தி.மு.க., நிர்வாகிகள் உதவி தான் செய்து வருகின்றனர். நாங்கள் 2021 சட்டசபை தேர்தலில், ஆறு இடங்களில் போட்டியிட்டோம். வரவுள்ள தேர்தலில் கூடுதல் இடங்களை தி.மு.க., விடம் கேட்போம்.
- வீரபாண்டியன்
மாநில செயலர், இ.கம்யூ.,

