sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'திங்கள் முதல் வர்றோம்!':அடம் பிடிப்பதை வாபஸ் வாங்கிய எதிர்க்கட்சியினர்

/

'திங்கள் முதல் வர்றோம்!':அடம் பிடிப்பதை வாபஸ் வாங்கிய எதிர்க்கட்சியினர்

'திங்கள் முதல் வர்றோம்!':அடம் பிடிப்பதை வாபஸ் வாங்கிய எதிர்க்கட்சியினர்

'திங்கள் முதல் வர்றோம்!':அடம் பிடிப்பதை வாபஸ் வாங்கிய எதிர்க்கட்சியினர்

14


UPDATED : ஜூலை 25, 2025 11:56 PM

ADDED : ஜூலை 25, 2025 11:31 PM

Google News

UPDATED : ஜூலை 25, 2025 11:56 PM ADDED : ஜூலை 25, 2025 11:31 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'அமளியில் ஈடுபட மாட்டோம். சபை நடவடிக்கைகள் தொடர முழு ஒத்துழைப்பு தருகிறோம்' என, வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வரும் திங்கட்கிழமை முதல் இரு சபைகளும் கூச்சல், குழப்பமின்றி சுமுகமாக நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 21ல் துவங்கியது.

லோக்சபா, ராஜ்யசபாவில் முதல் நாளே அமளியில் குதித்த காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'பஹல்காம் தாக்குதல், 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து விவாதம் நடத்த வேண்டும்; பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது' என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன.

இதனால், இரு சபைகளிலும் அலுவல்கள் முடங்கின. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் எவ்வளவு சொல்லிப்பார்த்தும், அக்கட்சிகள் கேட்கவில்லை.

'ஆப்பரேஷன் சிந்துார் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார்' என, பலமுறை தெரிவித்தும் கூட அமளியில் ஈடு படுவதை எதிர்க்கட்சிகள் விடவில்லை.

இதற்கிடையே, துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகித்த ஜக்தீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததும், தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று, வழக்கம்போல லோக்சபா, ராஜ்யசபா கூடின. எதிர்க்கட்சிகளும் வழக்கம் போல அமளியில் ஈடுபட, ஐந்தாவது நாளாக இரு சபைகளும் நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டன.

கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து, இரு சபைகளிலும் இதுவரை எந்த அலுவல்களும் நடக்கவில்லை.

எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால், பார்லி., முடங்கி உள்ளது. இதனால் நம் வரிப்பணமும் பல கோடி ரூபாய் வீணானது. 

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு நடக்கும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக, இரு சபைகளிலும் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அர்ஜும் ராம் மேஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.

அப்போது, பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன்

சிந்துார், பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, அரசு தரப்புக்கும், எதிர்க்கட்சி தரப்பும் இடையே புரிதல் ஏற்பட்டது. அரசின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், 'அமளியில் ஈடுபட மாட்டோம். சபை சுமுகமாக நடக்க ஒத்துழைப்பு தருவோம்' என, தெரிவித்தனர். ஒருமித்த கருத்து ஏற்பட்டதால், வரும் 28 முதல் இரு சபைகளிலும் அலுவல்கள் சுமுகமாக நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் குறித்து விவாதம் நடத்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அரசு சம்மதித்தது. அப்படியிருக்கையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவது ஏன்? விவாதம் நடப்பதை தடுப்பதே எதிர்க்கட்சிகள் தான். நாங்கள் அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம். இந்த ஐந்து நாட்களில் ஒரேயொரு மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது. கிரண் ரிஜிஜு பார்லி., விவகார அமைச்சர், பா.ஜ.,


துணை ஜனாதிபதி தேர்தல் நடத்த அதிகாரி நியமனம் மருத்துவ காரணங்களுக்காக, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக, ராஜ்யசபா பொதுச்செயலர் பி.சி.மோடியை நியமித்து, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டுள்ளது. ராஜ்யசபா செயலகத்தின் இணைச் செயலர் கரிமா ஜெயின், செயலகத்தின் இயக்குநர் விஜய் குமார் ஆகியோர், தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



விவாதத்துக்கு வருகிறது 'ஆப்பரேஷன் சிந்துார்' எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் 28ல், பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துார் குறித்து, லோக்சபாவில், 16 மணி நேர விவாதம் நடக்கிறது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தை துவக்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பேச உள்ளனர். இதே போல், 29ல், ராஜ்யசபாவிலும் 16 மணி நேர விவாதம் நடக்கிறது. இரு சபை களிலும் விவாதத்தின் போது பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த வாரம் பார்லி.,யில் அனல் பறக்கும்.



புதிய திருப்பம்! பண மூட்டை விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். இதை ஏற்ற ஜக்தீப் தன்கர், அன்றைய தினமே துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இதில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகள் கொடுத்த பதவிநீக்க தீர்மானம் ஏற்கப்படவில்லை என்றும், அதற்கு பதில், ஆளும் தரப்பே கொண்டு வரும் பதவிநீக்க தீர்மானம், லோக்சபாவில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.



குப்பை தொட்டி போராட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டாலும், பீஹார் வாக்காளர் திருத்த விவகாரம் ஒரு பிரச்னையாகவே உள்ளது. பார்லி., வளாகத்தில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர், குப்பைத் தொட்டியை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், சிறப்பு தீவிர திருத்த பணி என்ற போஸ்டரை கிழித்து போட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us