ADDED : ஜன 31, 2026 06:33 AM

தி.மு.க., நோக்கி மக்கள் ஆதரவு நகர்கிறது. தமிழகத்தில் பல்வேறு தேர்தல்களில், பல்வேறு அலைகளை பார்த்திருப்பீர்கள். இந்த சட்டசபை தேர்தல், ஸ்டாலின் அலையாக இருக்கும்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான், டில்லிக்கு அடிமையாக இருக்கிறார். நாங்கள் யாரையும் கெஞ்சுவதும் இல்லை; யாரை பார்த்தும் அஞ்சுவதற்கான தேவையும் இல்லை. இனத்தால், மொழியால், மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ., தமிழகத்தில் காலுான்றாத அளவிற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார்.
எங்காவது நடக்கும் ஓரிரு சம்பவங்கள்; எதிர்பாராமல் நடக்கும் அசம்பாவிதங்கள்; சொந்த காரணங்களுக்காக நடக்கும் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் குற்றஞ்சாட்டலாம். வரும் முன் தடுப்பது, வந்த பின் அதற்கான நடவடிக்கை எடுப்பது என இரண்டையும் ஒருசேர, தராசு போல் பாவிக்கும் அரசு தான் முதல்வர் ஸ்டாலினின் அரசு.
- சேகர்பாபு
தமிழக அமைச்சர், தி.மு.க.,

