sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுத்தர மாட்டோம்'

/

'ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுத்தர மாட்டோம்'

'ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுத்தர மாட்டோம்'

'ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுத்தர மாட்டோம்'


ADDED : பிப் 02, 2025 04:23 AM

Google News

ADDED : பிப் 02, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே மலையடிக்குப்பத்தில் விவசாய குடும்பங்களில் தரிசு நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசியதாவது:

கடலுார் அருகே மலையடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 155 விவசாயக் குடும்பங்கள் 165 ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தி குடியிருந்தும், முந்திரி உள்ளிட்ட சாகுபடிகளை 150 ஆண்டுகளாக செய்கிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில் கிராம மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 15 நாட்களுக்குள் சரியான காரணம் இல்லாத பட்சத்தில் வெளியேற்ற வேண்டும்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட விவசாயிகள் கொடுத்த விளக்கத்தின் மீது ஒரு உத்தரவு போடாமல் நடவடிக்கை எடுக்க முடியாது. 150 ஆண்டு காலமாக அனுபவித்து வந்த இந்த இடத்தை பட்டா போட்டு கொடுப்பதில் என்ன பிரச்னை உள்ளது. தமிழகத்தில் தனியார் சுயநிதி பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளுக்கு அரசு புறம்போக்கு இடங்களை பட்டா போட்டு அரசு கொடுத்துள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்னைக்காக ஒரு பிடி மண்ணைக் கூட விட்டு தர மாட்டோம். இதற்காக மாவட்டம் முழுவதும் வலுவான போராட்டம் பா.ஜ., சார்பில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us