sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்: முதல்வர் ஸ்டாலின்

/

மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்: முதல்வர் ஸ்டாலின்

மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்: முதல்வர் ஸ்டாலின்

மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்: முதல்வர் ஸ்டாலின்

42


ADDED : ஜன 09, 2025 06:37 PM

Google News

ADDED : ஜன 09, 2025 06:37 PM

42


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''யு.ஜி.சி., விதிமுறைகள் தொடர்பாக தமிழர்களின் குரல்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம், வெல்வோம்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவில் மாநில அரசு பிரதிநிதியை நீக்கி, புதிய விதிமுறைளை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு சம்பளம்தருவது மாநில அரசு; உதவித்தொகை - ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள். இவ்வளவையும் நாங்கள் செய்ய, பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த கவர்னர். இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் மத்திய அரசால் அனுப்பப்பட்ட கவர்னரே நியமிக்கலாம் என்று யு.ஜி.சி., தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?

தமிழகம் உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் யு.ஜி.சி., வரைவு அறிக்கை. இதனை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us