sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் 'அப்டேட்'

/

வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் 'அப்டேட்'

வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் 'அப்டேட்'

வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் 'அப்டேட்'


ADDED : டிச 24, 2024 09:20 AM

Google News

ADDED : டிச 24, 2024 09:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுவிழக்கிறது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று தென்மேற்கு திசையில் நகர்ந்தது. இது, நேற்றைய நிலவரப்படி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், தமிழகத்தின் வட கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவியது.

இது மேலும் இதே திசையில் நகர்ந்து தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி அருகே நிலவும். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுவிழக்கிறது. இருப்பினும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலுக்கு இன்றும், நாளையும் அறிவிக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகடலோரம் மற்றும் பிற மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களில், அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்;

ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில், சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us