sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெள்ளை சேலை உடுத்தி தொழு முன் வெண் பொங்கல் வைத்து வழிபாடு கரும்பு ரூ.50,000 வரை ஏலம் போகும்

/

வெள்ளை சேலை உடுத்தி தொழு முன் வெண் பொங்கல் வைத்து வழிபாடு கரும்பு ரூ.50,000 வரை ஏலம் போகும்

வெள்ளை சேலை உடுத்தி தொழு முன் வெண் பொங்கல் வைத்து வழிபாடு கரும்பு ரூ.50,000 வரை ஏலம் போகும்

வெள்ளை சேலை உடுத்தி தொழு முன் வெண் பொங்கல் வைத்து வழிபாடு கரும்பு ரூ.50,000 வரை ஏலம் போகும்


ADDED : ஜன 16, 2024 11:36 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சலுகைபுரத்தில் 9 வது தலைமுறையை சேர்ந்த குடும்பத்து பெண்கள் வெள்ளைசேலை உடுத்தி, சுவாமிக்கு வெண் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இங்கு ஒரே சமூகத்தை சேர்ந்த 46 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆண்டு தோறும் மாட்டு பொங்கல் அன்று மாட்டு தொழுவிற்கு முன் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி, விரதமிருந்து வெண் பொங்கல் வைத்து வழிபடுவர். நேற்று மாட்டு பொங்கலையொட்டி இக்கிராமத்தில் 35 பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைக்க மண் பானைகளுடன் வீட்டிற்கு முன் காத்திருந்தனர்.

சாமியாடிகள் வீடு தோறும் சென்று, அவர்களை தொழு பொட்டலுக்கு அழைத்து வந்தனர். பொங்கல் வைக்கும் மண் பானைகளுடன் ஊர்வலமாக சென்று மதியம் 12:30 மணிக்கு வெண் பொங்கல் வைத்து, பாரம்பரிய முறைப்படி வழிபட்டனர். பின்னர் தொழுவில் இருந்த கால்நடைகளுக்கு பொங்கல் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us