sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்க பொதுநல வழக்கு

/

தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்க பொதுநல வழக்கு

தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்க பொதுநல வழக்கு

தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்க பொதுநல வழக்கு


ADDED : ஜூலை 17, 2011 01:13 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கே.கே.நகரை சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை - மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள டோல் கேட்டில் தினமும் ரூ. 10 லட்சம் சுங்கவரி கிடைக்கிறது. ஆனால் அதற்கேற்ப தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ரோட்டை பராமரிப்பதில்லை. இதனால் தினமும் விபத்துக்கள் நடக்கின்றன. இணைப்பு ரோடுகளில் விளக்கு வசதி இல்லை. முறையான அணுகுசாலைகளும் கிடையாது. இக்குறைகளை களைய, கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி, இந்திய தேசிய ஆணையத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தேசிய நெடுஞ்சாலையில் தரத்தை மேம்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனுதாரர் சார்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார். நீதிபதிகள் ஜனார்த்தன ரெட்டி, சுந்தரேஷ் ஆகியோரை கொண்ட பெஞ்ச், மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.








      Dinamalar
      Follow us