sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாஞ்சோலை தொழிலாளர்களை மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டதா

/

மாஞ்சோலை தொழிலாளர்களை மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டதா

மாஞ்சோலை தொழிலாளர்களை மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டதா

மாஞ்சோலை தொழிலாளர்களை மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டதா


ADDED : நவ 07, 2024 02:20 AM

Google News

ADDED : நவ 07, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'மாஞ்சோலை தேயிலை தோட்ட ஊழியர்களை, விருப்ப ஓய்வு விண்ணப்பங்களில், வற்புறுத்தி கையெழுத்திட வைத்துள்ளனர்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசிடமிருந்து, 99 ஆண்டுகள் குத்தகைக்கு, மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி, 'பி.பி.டி.சி., எனும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' நிறுவனம் நிர்வகிக்கிறது. கடந்த 2018ல், 8,374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக அரசு அறிவித்தது.

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, விருப்ப ஓய்வு திட்டத்தை, பி.பி.டி.சி.,நிறுவனம் அறிவித்தது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தொழிலாளர்கள் தரப்பில்,'மறுவாழ்விற்கான உதவிகள் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, தமிழக அரசின் 'டான்டீ' தேயிலை தோட்டக் கழக நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்' என, வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல, 'விருப்ப ஓய்வு திட்டத்தில், தொழிலாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை, ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்' என, புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு அமர்வுக்கு மாற்றி, கடந்த விசாரணையின்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன்படி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடியதாவது:

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், 'பாரம்பரிய வனவாசி' என்ற வரையறையின் கீழ், இடம்பெற மாட்டார்கள். புலம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடியாது. தேயிலை தோட்டத்தை, 'டான்டீ' கையகப்படுத்துவது சாத்தியமில்லை. ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளது.

மனிதாபிமான அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, வணிகக் கடன் வழங்குவதுடன், வீட்டு மனை, வீடுகள் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மணிமுத்தாறில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, தயாராக உள்ளன.

பாரம்பரியமாக வசிப்போர் மட்டுமே, வனப்பகுதியில் குடியிருக்க உரிமை உள்ளது. மற்றவர்கள் வசிக்க உரிமையில்லை.

இவ்வாறு அவர் வாதாடினார்.

பி.பி.டி.சி., நிறுவனம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், ''மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதி, காப்புக்காடு மற்றும் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அங்கு நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடர இயலாது. இது, ஊழியர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றதால், அவர்களுக்கு நிறுவனம் இரண்டு மடங்கு இழப்பீடு வழங்கி உள்ளது,'' என்றார்.

மனுதாரர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், 'வலுக்கட்டாயமாக தொழிலாளர்களை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை பெற உரிமை உள்ளது. இயற்கையோடு வாழ்ந்த இடத்திலேயே, தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும்' என்றனர்.

இதையடுத்து அனைத்து தரப்பிலும், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us