sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் எதற்குப் பயன்படுகிறது: கேட்கிறார் அண்ணாமலை

/

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் எதற்குப் பயன்படுகிறது: கேட்கிறார் அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் எதற்குப் பயன்படுகிறது: கேட்கிறார் அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் எதற்குப் பயன்படுகிறது: கேட்கிறார் அண்ணாமலை

32


ADDED : பிப் 03, 2025 12:41 PM

Google News

ADDED : பிப் 03, 2025 12:41 PM

32


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் விதிகள் மற்றும் சட்டங்களை மதிக்காமல் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த அரசின் செயல்பாட்டின் உண்மையை உயர் போலீஸ் அதிகாரியால் கூட பேச முடியவில்லை. துணை ஆய்வாளர் நியமனத்தில் தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சுட்டிக்காட்டினார். அதற்குப்பரிசாக அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் இருந்திருந்தால் அவர் உயிரை இழந்திருக்கலாம். மிக மோசமான விஷயம் என்னவென்றால், இந்த விஷயத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை போலீசார் புறக்கணித்தது ஏன்?

உயர் போலீஸ் அதிகாரிகள் மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க விரும்பினாலும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகள் வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது.

தமிழகத்தில் ஊழல், முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுகின்றனர்; போலீஸ் உயர் அதிகாரிகள் கூட மாநிலத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்க பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us