ADDED : பிப் 18, 2025 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை அருகே, 17 வயது சிறுமி, ஏழு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறுமியருக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக,. தி.மு.க., ஆட்சியில், தமிழகம் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.
'குற்றம் நடந்த பின் கைது செய்து விட்டோம்' என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை சொல்ல மறுக்கிறார். தனக்கு தானே, 'அப்பா' என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு?
பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்து விட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் தி.மு.க., அரசை கண்டிக்கிறேன். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

