sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 29 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத துாக்குத்தண்டனை பின்னணி என்ன?

/

தமிழகத்தில் 29 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத துாக்குத்தண்டனை பின்னணி என்ன?

தமிழகத்தில் 29 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத துாக்குத்தண்டனை பின்னணி என்ன?

தமிழகத்தில் 29 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத துாக்குத்தண்டனை பின்னணி என்ன?

6


ADDED : மார் 09, 2025 06:47 AM

Google News

ADDED : மார் 09, 2025 06:47 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழக சிறைகளில் துாக்குத்தண்டனைக்கு ஆளானவர்கள் மேல்முறையீடு செய்து 'சாகும் வரை தண்டனை' பெற்றதாலும், மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் 29 ஆண்டுகளாக துாக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

பெண்கள் தொடர்பான கொடுங்குற்றம் உள்ளிட்ட வழக்குகளில் அதிகபட்ச தண்டனையாக துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இருநாட்களுக்கு முன்புகூட கொலை வழக்கு ஒன்றில் ஒருவருக்கு நெல்லை நீதிமன்றம் துாக்குத் தண்டனை விதித்தது. கடந்தாண்டு கன்னியாகுமரி கிரீஷ்மாவுக்கு காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் கேரளா நீதிமன்றம் துாக்குத்தண்டனை விதித்தது.

மதுரை சிறையில் கட்டவெள்ளை திவாகர் என்பவர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். கோவை, திருச்சி, கடலுார், புழல் உட்பட 9 மத்திய சிறைகளில் 24 கைதிகள் மரண தண்டனைக்குள்ளானவர்கள். அவர்கள் அனைவரும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மரண தண்டனையை 'சாகும் வரை தண்டனை' யாக பெற்று சிறையில் உள்ளனர். இதனால் 29 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் துாக்குத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

சிறை அதிகாரிகள் கூறியதாவது: 1996ல் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆட்டோ சங்கருக்கு துாக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 'சாகும் வரை தண்டனை' அனுபவிக்கும் கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை செய்வது போன்ற எந்த சலுகையும் கிடைக்காது.

பெண்களை வீடியோ எடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைதான நாகர்கோவில் காசி, 1996ல் நாகர்கோவில் சிறைக்குள் புகுந்து ரவுடி லிங்கத்தை கொலை செய்த வழக்கில் ராதாகிருஷ்ணன், துாக்கு செல்வம், கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ், சென்னையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததோடு, அவ்வழக்கில் ஜாமினில் வெளிவந்து தன் தாயை கொலை செய்த அஸ்வந்த் உள்ளிட்டோர் சாகும் வரை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

டில்லி உட்பட வடமாநிலங்களில் இன்றும் துாக்குத்தண்டனை நிறைவேற்றும் வழக்கம் உள்ளது. தமிழகத்தில் அந்த நடைமுறை மறைந்து 29 ஆண்டுகளாகிவிட்டது. துாக்குத்தண்டனையில் இருந்து தப்பிக்க மேல்முறையீடு, ஜனாதிபதிக்கு கருணை மனு என பல வழிகள் உள்ளதாலும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் துாக்குத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்காததாலும் அரசும் அத்தண்டனையை ஊக்குவிப்பதில்லை. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us