sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

என்னிடம் பழனிசாமி என்ன பேசினாரோ அதையே விஜயிடமும் பேசியிருப்பார்: கூட்டணி பேரம் குறித்து சீமான் பேட்டி

/

என்னிடம் பழனிசாமி என்ன பேசினாரோ அதையே விஜயிடமும் பேசியிருப்பார்: கூட்டணி பேரம் குறித்து சீமான் பேட்டி

என்னிடம் பழனிசாமி என்ன பேசினாரோ அதையே விஜயிடமும் பேசியிருப்பார்: கூட்டணி பேரம் குறித்து சீமான் பேட்டி

என்னிடம் பழனிசாமி என்ன பேசினாரோ அதையே விஜயிடமும் பேசியிருப்பார்: கூட்டணி பேரம் குறித்து சீமான் பேட்டி

2


UPDATED : ஏப் 20, 2025 12:52 AM

ADDED : ஏப் 19, 2025 07:30 PM

Google News

UPDATED : ஏப் 20, 2025 12:52 AM ADDED : ஏப் 19, 2025 07:30 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''அ.தி.மு.க., தரப்பில் என்னிடம் என்ன பேசப்பட்டதோ, அதையே விஜயிடமும் பேசியிருப்பர்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழகத்துக்காக என்ன தனித்த குணத்தை தி.மு.க., காட்டி விட்டது? மத்திய அரசோடு கூட்டணியில் இருந்துவிட்டு, மாநில தன்னாட்சி குறித்து பேசுவது சரியா? ஹிந்தியை திணித்தது காங்கிரஸ். இதை எதிர்த்து, நாடு முழுதும் தமிழன் தான் போராடினான். பின், அற்ப தேர்தல் அரசியல் வெற்றிக்காக, பதவிக்காக, அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது தி.மு.க., ஆனால், பா.ஜ., அரசு ஹிந்தியை திணிப்பது போல தி.மு.க., பேசி, நாடகமாடி வருகிறது.

மாநில உரிமைகளை பறித்ததும் காங்கிரஸ், அவ்வாறு பறித்தபோது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது, தி.மு.க.,தான். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, தற்போது, மாநில சுயாட்சியை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது தி.மு.க., இதெல்லாம் வெற்று வேலை. திராவிட மாடல் அரசு, தனித்த அடையாளத்துடன் செயல்படுவதாக பெருமை பேசுகின்றனர்.

லஞ்சம், ஊழலில் திளைத்திருப்பது தான் தனித்த அடையாளமா?

தேர்தல் வரும்போது மட்டும், தமிழர், தமிழர் என, தனிப்பாசம் தி.மு.க.,வுக்கு வரும். இந்த வார்த்தைகளுக்கு மயங்கும் கூட்டம், போயே போச்சு. அறிவும், தெளிவும், அரசியல் புரிதலும் கொண்ட தமிழ் சமூகம் எழுந்துவிட்டது. இனி, தி.மு.க.,வின் வார்த்தை ஜாலம் மக்கள் மத்தியில் எடுபடாது.

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணை வைத்துக் கொள்ள, பல கட்சிகளும் போட்டி போடுகின்றன. ஆனால், வரும் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவேன்; சின்னத்துக்காக காத்திருக்கிறேன். கூட்டணி ஆட்சி அமைக்க விரும்புவது, எதிர்தரப்பின் பலவீனத்தால் கிடையாது.

என்னிடம் அ.தி.மு.க., தரப்பில் இருந்து, கூட்டணி குறித்து என்னவெல்லாம் பேசினரோ, அதையே தான் விஜயிடமும் பேசி இருப்பர். கூட்டணி தொடர்பாக, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பேசுவதுபோல், புறணி பேசக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us