sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

/

புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : பிப் 05, 2024 07:17 AM

Google News

ADDED : பிப் 05, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணிகளை விரைந்து துவக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவதையொட்டி, கடந்த 2023 ஜூன் மாதம் முதல், புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில், மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், கடந்த ஏழு மாதங்களில், ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ளன. புதிய கார்டுக்கான விண்ணப்பங்கள் அங்கீகாரம் வழங்கப்படாமலும், அச்சிடும் பணிகளும் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ரேஷன் பொருட்களை பெற முடியாமல், ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றன.

லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் புதிய ரேஷன் கார்டு அச்சிட முடியாது.விண்ணப்பித்து காத்திருப்போர், மேலும் ஆறுமாதங்களுக்கு ரேஷன் கார்டு பெறமுடியாத நிலை ஏற்படும். புதிய ரேஷன் கார்டு அச்சிட்டு பணிகளை உடனடியாக துவக்க அரசு உத்தரவிட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காப்பீடு திட்டம் சேர்வதில் சிக்கல்


தமிழகத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழைகள், உயர் சிகிச்சைகள் பெறுவதற்கு, அரசின் காப்பீடு திட்டம் கைகொடுத்துவருகிறது. ரேஷன் கார்டுதான் இதற்கு பிரதான ஆவணம் என்பதால், ஏழைகள், மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையமுடியாமல் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர்.








      Dinamalar
      Follow us