sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜாமினில் வந்த 75 வங்கதேசத்தவர் எங்கே? விழி பிதுங்கும் தமிழக போலீஸ்

/

ஜாமினில் வந்த 75 வங்கதேசத்தவர் எங்கே? விழி பிதுங்கும் தமிழக போலீஸ்

ஜாமினில் வந்த 75 வங்கதேசத்தவர் எங்கே? விழி பிதுங்கும் தமிழக போலீஸ்

ஜாமினில் வந்த 75 வங்கதேசத்தவர் எங்கே? விழி பிதுங்கும் தமிழக போலீஸ்

1


ADDED : ஜன 31, 2025 12:44 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:44 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போலி ஆதாரங்களுடன் தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் மாநிலம் முழுதும் வரிசை யாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டில், 175 பேர், லோக்கல் போலீஸ் மற்றும், 'கியூ' பிரிவு போலீசாரால் இப்படி கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பலரும் கோர்ட்டில் ஜாமின் பெற்று வெளியே வந்தனர். வந்தவர்களில் பலரை தற்போது காணவில்லை; எங்கிருக்கின்றனர் என்று தெரியாமல், போலீஸ் விழிக்கிறது. 75 பேர் காணாமல் போனதாக ஒரு அதிகாரி கணக்கு சொன்னார்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பிரஜை, கிரிமினல் குற்றம் இழைத்தால், அவரை கைது செய்து சிறையில் வைப்பர். வழக்கு விசாரணை நடக்கும் போதே, கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்து, சம்பந்தப்பட்ட நபர் வெளியில் வருவார்.

அப்படி வருபவரை, வெளிநாட்டு குற்றவாளிகளை அடைப்பதற்கென்றே, வருவாய்த்துறையால் உருவாக்கி நிர்வகிக்கப்படும், திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்வர். வழக்கு முடியும் வரை, அங்குதான் இருக்க வேண்டும்.

தனி அரசாணை


திருச்சி முகாமில் அடைப்பதற்கு, விசாரணை அதிகாரி, 'கியூ' பிரிவு அல்லது வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் வாயிலாக தமிழக பொதுத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும்.

அதை வைத்து, அரசு ஒவ்வொரு கைதிக்கும் தனி அரசாணை வெளியிட வேண்டும். இதுதான் நடைமுறை.

வங்கதேசத்தவர் விஷயத்தில், இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. புழல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், வரிசையாக ஜாமினில் வெளிவந்து, எங்கெங்கோ சென்று விட்டனர். கோர்ட் விசாரணைக்கு வராமல் போகும் போதுதான், போலீசுக்கு தெரிந்து தேடத் துவங்குகின்றனர்.

நாடு பூராவும் வங்கதேசத்தினரை தேடித்தேடி பிடிப்பதால், அவர்கள் வேறு மாநிலத்துக்கு போயிருக்க முடியாது. மியான்மருக்கு சென்றிருக்கலாம் என, போலீஸ் சந்தேகப்படுகிறது.

போலி ஆதார் அட்டை, போலி பணி அடையாள அட்டை வைத்துக் கொண்டு சென்னை புறநகர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பெருந்துறை போன்ற இடங்களில் பணியில் இருந்த வங்கதேசத்தினரையே போலீசார் கைது செய்தனர்.

தவிக்கிறது


அவர்கள் வேறு நாட்டுக்கு சென்று விட்டனரா, அல்லது தமிழகத்திலேயே வேறு ஊர்களில் பதுங்கி உள்ளனரா என்று தெரியாமல் தவிக்கிறது தமிழக போலீஸ்.

இதற்கிடையில், 'வெளிநாட்டில் இருந்து இந்தியா வுக்கு வந்து, குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைக்கு வழக்கு விசாரணையின் போது ஜாமின் கிடைத்தாலும், வழக்கு முடியும் வரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக்கூடாது.

இந்தியாவில் அவர்களுக்கு என அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு முகாம்களில் தங்க வைத்து கண்காணிக்க வேண்டும்' என, கடந்த, 6ல் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us