ADDED : நவ 21, 2025 06:35 AM

நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க, சேமிப்பு கிடங்குகள் மற்றும் உணவு கிடங்குகள் அமைக்க, 309 கோடி ரூபாய் செலவிட்டதாக, தி.மு.க., அரசு கணக்கு காட்டியிருக்கிறதே, எந்த மாவட்டத்தில் எத்தனை கிடங்குகள் அமைக்கப்பட்டது என்பதற்கு, வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?
குறித்த நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாமல், வாகனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், 160 கோடி ரூபாய் ஊழல் செய்ததால், நெல் கொள்முதலில் தாமதம் ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு இன்னும் ஏன் முதல்வரோ, உணவு துறை அமைச்சர் சக்கரபாணியோ பதிலளிக்கவில்லை?
கொள்முதல் செய்வதில் தி.மு.க., அரசு ஏற்படுத்திய தாமதத்தால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, ஈரப்பதம் அதிகமானதற்கு யார் காரணம்?
ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய அரசின் மீது பழிபோட கூச்சமாக இல்லையா?
-- அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்.

