sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெஞ்சல் புயல் எங்கே? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்!

/

பெஞ்சல் புயல் எங்கே? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்!

பெஞ்சல் புயல் எங்கே? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்!

பெஞ்சல் புயல் எங்கே? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்!

3


UPDATED : நவ 30, 2024 05:17 PM

ADDED : நவ 30, 2024 01:15 PM

Google News

UPDATED : நவ 30, 2024 05:17 PM ADDED : நவ 30, 2024 01:15 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.,30) மாலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே பெஞ்சல் புயல் கரையை கடக்கும்' என தென்னிந்திய வானிலை ஆய்வு மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தென் மேற்கு வங்க கடல் பகுதியில், பெஞ்சல் புயல் தற்போது சென்னை தென் கிழக்கே, 90 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 80 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே புயல் கரையை கடக்கும். மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது கரையை கடக்க துவங்கும் போது மெதுவாக நகரும்.

புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.






      Dinamalar
      Follow us