ADDED : பிப் 27, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த, 1991, மே, 21ல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், முன்னாள் பிரதமர் ராஜிவ், மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த, பல்லாவரம் இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் கொல்லப்பட்டார்.
இவரது மகன்தான், தற்போது நீலாங்கரை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள, பிரவீன் ராஜேஷ்.
இவரது தாயார், ராஜிவ் கொலை வழக்கில் கைதான நபர்களை விடுதலை செய்யக்கூடாது என, சட்டப்போராட்டம் நடத்தியவர் என, ராஜிவ் கொலை சம்பவத்தில் உயிர் பிழைத்த முன்னாள் போலீஸ் அதிகாரி அனுசுயா டெய்சி தெரிவித்தார்.

