sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எதிர்க்கட்சிகளை கண்டு ஆளும்கட்சி அஞ்சி நடுங்குவது ஏன்: ராமதாஸ்

/

எதிர்க்கட்சிகளை கண்டு ஆளும்கட்சி அஞ்சி நடுங்குவது ஏன்: ராமதாஸ்

எதிர்க்கட்சிகளை கண்டு ஆளும்கட்சி அஞ்சி நடுங்குவது ஏன்: ராமதாஸ்

எதிர்க்கட்சிகளை கண்டு ஆளும்கட்சி அஞ்சி நடுங்குவது ஏன்: ராமதாஸ்


ADDED : டிச 12, 2024 07:51 PM

Google News

ADDED : டிச 12, 2024 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ஒரு சட்டசபை கூட்டத்தொடரை இரண்டு நாட்கள் மட்டும் நடத்துவது, ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் துரோகம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சட்டசபையின் மழைக் காலக் கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின், தமிழக சட்டசபையின் 72 ஆண்டு கால வரலாற்றில், ஒரு கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடந்திருப்பது, இதுவே முதல் முறை.

அதேபோல், நடப்பாண்டில் 18 நாட்கள் மட்டுமே சட்டசபை கூடியிருக்கிறது. அதிலும், கவர்னர உரை, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மூன்று நாட்களையும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., புகழேந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட்ட நாளையும் கழித்து விட்டால், மொத்தம் 14 நாட்கள் மட்டும் விவாதங்கள் நடந்துள்ளன.

அதிலும், 55 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது, எட்டு நாட்கள் மட்டுமே விவாதம் நடந்துள்ளது. அதிக நாட்களுக்கு சட்டசபை கூட்டம் நடந்தால், அதிக அளவில் அம்பலப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மிகக்குறைந்த நாட்களுக்கு சபையை, தி.மு.க., அரசு நடத்துகிறது.

இது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் துரோகம். அரசுக்கு எதிராக பேசினால், உடனடியாக நேரடி ஒளிபரப்பு ரத்து செய்யப்படுகிறது. எதிர்க்கட்சிகளைக் கண்டு ஆளும்கட்சி ஏன் இந்த அளவுக்கு அஞ்சி நடுங்குகிறது என்பது தெரியவில்லை.

சட்டசபை தான் ஜனநாயகத்தின் நாற்றங்கால். அங்கிருந்து தான் ஜனநாயகம் தழைக்க வேண்டும். ஆனால், நாற்றங்கால்களையே தி.மு.க., அரசு கருகச் செய்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us