sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஆணவ படுகொலைகளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?'

/

'ஆணவ படுகொலைகளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?'

'ஆணவ படுகொலைகளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?'

'ஆணவ படுகொலைகளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?'


ADDED : ஆக 01, 2025 04:57 AM

Google News

ADDED : ஆக 01, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி:

திருநெல்வேலியில் ஆணவக் கொலை அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. தென் மாவட்டங்கள் மட்டுமல்ல; வட, மேற்கு மாவட்டங்களிலும் ஜாதிவாத அரசியல் பரவி வருகிறது.

ஜாதிவாத சக்திகளும், மதவாத சக்திகளும் ஜாதி பெருமிதத்தை அரசியலாக உயர்த்தி பிடிக்கின்றன; ஜாதி பெருமிதத்தின் அடிப்படையில் நடக்கும் கொலைகளை ஊக்கப் படுத்தி வருகின்றன.

இதற்கு, ஜாதிவாத சக்திகளும், மதவாத சக்திகளும் திட்டமிட்டு பரப்புகிற ஜாதி பெருமை அரசியல் தான் முக்கிய காரணம். இதை தடுப்பதற்கு, தேசிய அளவில் ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

ஆனால், தமிழகம் உட்பட பல மாநில அரசுகள், ஆணவக் கொலை தடுப்பு சட்ட கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு, ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்றலாமா என மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கருத்து சொல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், ஆணவக் கொலை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களையும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றவில்லை.

இ து தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றோம். அவரை சந்திக்க முடியாததால், துறையில் மனு கொடுத்துள்ளோம். எஸ்.சி., - பி.சி., எனும் அடிப் படையில் ஆணவக் கொலைகள் நடப்பதில்லை.

ஓ.பி.சி., சமூகத்தினரிடையே கூட ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தாலும் கொலைகள் நடக்கின்றன. இது ஒரு சமூக பிரச்னை; இதை தடுக்க, தேசிய அளவிலான சட்டம் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us