தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
UPDATED : ஜன 14, 2025 02:44 PM
ADDED : ஜன 14, 2025 05:29 AM

சென்னை: ராமநாதபுரம், தென்காசி, துாத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: வடகிழக்கு பருவக்காற்று முழுமையாக இன்னும் விலகாத நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.கடல் மட்டத்தில் இருந்து, 0.9 கி.மீ., உயரத்தில், இந்த சுழற்சி காணப்படுகிறது.
இதனால், தென் மாவட்டங்களில் அனேக இடங்கள், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 19 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். ராமநாதபுரம், தென்காசி, துாத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.