தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அன்புமணி நீக்கமா? ராமதாஸ் சஸ்பென்ஸ்

அன்புமணி நீக்கமா? ராமதாஸ் சஸ்பென்ஸ்

அன்புமணி நீக்கமா? ராமதாஸ் சஸ்பென்ஸ்


UPDATED : ஜூன் 02, 2025 04:33 AM

ADDED : ஜூன் 02, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2025 04:33 AM ADDED : ஜூன் 02, 2025 01:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: “பா.ம.க.,வில் எந்த குழப்பமும் இல்லை. எல்லா பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்,” என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வலுத்த நிலையில், கடந்த 30 முதல், சென்னை சோழிங்கநல்லுாரில், மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கினார். அவர்கள், அதே பொறுப்பில் தொடருவர் என அன்புமணி போட்டியாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், கட்சி நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை நடத்திய பின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று பேட்டி அளித்தார்.

அவரிடம், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்குத்தான் முழு அதிகாரம் இருப்பதாக அன்புமணி கூறியது பற்றி கேட்டபோது, “பா.ம.க., சட்ட விதிகள் பற்றி பிறகு சொல்கிறேன். ஒவ்வொரு கட்சியிலும் இதுபோன்று நடப்பது சகஜம் தான். இதை நீங்கள் பெரிதுபடுத்த தேவை இல்லை. சுதந்திரமாக செயல்படுவது அவரது உரிமை. கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது பற்றி இன்னும் யோசிக்கவில்லை. தொண்டர்களுக்கிடையே எந்த குழப்பமும் இல்லை. எல்லா பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்,” என அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி பதிலளித்தார்.

ராமதாஸ் தொடர்ந்து கூறுகையில், “பூம்புகாரில் ஆகஸ்ட் 10ல் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறும். இது முழுக்க முழுக்க பெண்கள் கலந்து கொள்ளும் மாநாடு. இந்த மாநாட்டு குழு தலைவராக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி இருப்பார். மாநாட்டில் கலந்து கொள்ள எல்லோருக்கும் அழைப்பு விடப்படும். என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை. கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரி வரை, 95,000 கிராமங்களுக்கு 46 ஆண்டாக பயணம் செய்து கட்சியை வளர்த்திருக்கிறேன்,” என்றார்.

கட்சி பொருளாளர் திலகபாமாவை நீக்கியது போல், அன்புமணியை நீக்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க ராமதாஸ் மறுத்துவிட்டார். அ.தி.மு.க., அறிவித்துள்ள ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் பா.ம.க., இடம் பெறாதது குறித்து கேட்டதற்கு, “பதவி வரும் போகும், வரும் போது வரும்,” என்று ராமதாஸ் கூறினார்.

சமரசம் செய்த காந்திமதி?

பேட்டியின்போது, அன்புமணி பெயரை கூட ராமதாஸ் உச்சரிக்கவில்லை. நிருபர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறினார். வரும் வியாழக்கிழமை நடைபெறும் வாராந்திர நிருபர்கள் சந்திப்பின் போது, கட்சி குறித்து இன்னும் விபரமாக கூறுவதாகவும் தெரிவித்தார். பேட்டியளிக்கும் முன், ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, தைலாபுரம் தோட்டத்தில் அவரை சந்தித்தார். அதனால் தான், பேட்டியின்போது ராமதாஸ் மென்மையான போக்கை கடைப்பிடித்தார் என, கட்சி வட்டாரத்தில் தெரிவித்தனர்.



'விரைவில் பொதுக்குழு'

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர், அருள்மொழி கூறும்போது, “பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தான் தலைவராகவும் அன்புமணி செயல் தலைவராகவும் செயல்படுவார் என்று ஆரம்பத்திலேயே அறிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன் போட்ட கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் நிறுவனர் ராமதாசிற்கு மட்டுமே உள்ளது. எனவே, விரைவில் பொதுக்குழுவை கூட்டும் ஏற்பாடுகளை ராமதாஸ் செய்வார்,” என்றார்.



அரசுக்கு சமூக நீதி தெரியாது

அதில் நாம் பிஎச்.டி., கட்சியில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். ஒரு உறுப்பினர் படிவத்தில், 25 பேரை சேர்க்கலாம். உறுப்பினர் அட்டையில் உள்ள கியூ.ஆர்., கோடை 'ஸ்கேன்' செய்து, 5 ரூபாய் செலுத்தி உறுப்பினராவதை உறுதி செய்ய வேண்டும்.தேர்தலுக்காக, கட்சி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் 10 பேரை தேர்வு செய்ய வேண்டும். கிளைச்செயலரே பூத் தலைவர் ஆவார். இந்த பணியை மூன்று வாரத்தில் முடிக்க வேண்டும். நான், நான்கு வாரம் தருகிறேன். தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் குறைந்தது, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் வேண்டும். அதன்பின், தமிழகத்தில் நடக்க உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கென, தனி வேலை உள்ளது. தற்போதைய தமிழக அரசு, சமூக நீதி என்றால் என்ன என தெரியாமல் உள்ளது. சமூக நீதியில், நாம் பிஎச்.டி., முடித்துள்ளோம். நாட்டிலேயே சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக, ராமதாஸ் உள்ளார். அவரது சமூக நீதி, சமத்துவம், ஜனநாயக கொள்கைகளை பின்பற்றி அடுத்த கட்டத்திற்கு பா.ம.க., செல்ல வேண்டும்.அன்புமணி, தலைவர், பா.ம.க.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us