ADDED : பிப் 27, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, இரண்டாவது முறையாக, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை வைத்தனர். அதை தொடர்ந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஜாமின் வழக்கில் இன்று காலை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பிக்கிறார்.

