sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஸ் ஊழியர் ஊதிய பேச்சு நாளை நல்லபடியாக முடியுமா?

/

பஸ் ஊழியர் ஊதிய பேச்சு நாளை நல்லபடியாக முடியுமா?

பஸ் ஊழியர் ஊதிய பேச்சு நாளை நல்லபடியாக முடியுமா?

பஸ் ஊழியர் ஊதிய பேச்சு நாளை நல்லபடியாக முடியுமா?


ADDED : மே 28, 2025 12:15 AM

Google News

ADDED : மே 28, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சில், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்பதில், நிர்வாகம் பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டுக்கு மேலாகியும், 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

அது தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சு, சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதற்கு, 84 தொழிற்சங்கங்கள் அழைக்கப்பட்டுள்ளன.

தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த, தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - அ.தொ.பே., தொழிற்சங்கங்களுக்கு மட்டும் தலா இரண்டு பேர் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது.

மற்ற தொழிற்சங்கங்களுக்கு தலா ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. இது, தொழிற்சங்கங்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது:

இதற்கு முன் நடந்த இரண்டாம் கட்ட பேச்சில், ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.சி.யு.சி., போன்ற 13 மத்திய தொழிற்சங்கங்களுக்கு தலா இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, மூன்று சங்கங்களுக்கு மட்டுமே இருவர் அனுமதி.

மற்ற சங்கங்கள் சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இது, தொழிலாளர்கள் மத்தியில் பாரபட்சத்தை ஏற்படுத்தும்.

தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது. முத்தரப்பு பேச்சில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவே கருதுகிறோம்.

எனவே, கூடுதல் நிர்வாகிகளை அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, நிர்வாகத்துக்கு கடிதமும் அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு, 15வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக்கோரி தமிழக முழுதும், 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணிமனைகளில், நேற்று அதிகாலையில், சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் பிற துறை ஊழியர்களுக்கு இணையான சம்பளம்; பணி ஓய்வு நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும். பிற துறை ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போன்றே போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். மின்சார பஸ்கள், மினி பஸ்களை அரசே இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். சென்னையில், பல்லவன் இல்லம், வடபழனி, சைதாப்பேட்டை, வியாசர்பாடி, திருவான்மியூர் உட்பட 32 பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.








      Dinamalar
      Follow us