sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வணிகர் நல வாரிய தலைவராக வணிகரை நியமிக்குமா அரசு?

/

வணிகர் நல வாரிய தலைவராக வணிகரை நியமிக்குமா அரசு?

வணிகர் நல வாரிய தலைவராக வணிகரை நியமிக்குமா அரசு?

வணிகர் நல வாரிய தலைவராக வணிகரை நியமிக்குமா அரசு?


ADDED : ஜூலை 20, 2025 06:20 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக வணிகர் நல வாரிய தலைவராக, வணிகரையே அரசு நியமிக்குமா என்ற எதிர்பார்ப்பு, வணிகர்களிடம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் மளிகை, ஜவுளி போன்ற தொழில்களில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில், 11:50 லட்சம் பேர் ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளனர். வணிகர்களுக்கு உதவ வணிகர் நல வாரியம் உள்ளது.

திருமண உதவி


இதன் தலைவராக முதல்வர், துணை தலைவராக வணிக வரித்துறை அமைச்சர், அலுவலர் சார்ந்த உறுப்பினர்களாக ஐந்து அதிகாரிகளும், அலுவல் சாரா உறுப்பினர்களாக, 30 வணிகர்களும் உள்ளனர்.

வணிகர் நல வாரியம் சார்பில், வாரியத்தில் உறுப்பினராக இருந்து உயிரிழக்கும் வணிகரின் குடும்பத்துக்கு நிதியுதவி, மருத்துவ உதவி, திருமண உதவி உட்பட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

கடந்த, 2023 ஜூலை 7ல் நியமிக்கப்பட்ட வணிகர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்களின், இரு ஆண்டு பதவி காலம் இம்மாதம், 7ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், வணிக நல வாரிய தலைவராக, வணிகரே நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, வணிகர்களிடம் எழுந்து உள்ளது.

இதுகுறித்து, வணிகர்கள் கூறியதாவது:

அரசுக்கு வரி வருவாய் ஈட்டி தருவதில், வணிகர்கள் தான் முதுகெலும்பாக உள்ளனர்.

பல கட்சியினரும், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளும், சிறு கடை என்று கூட பார்க்காமல், நன்கொடை கேட்டு தொல்லை தருகின்றனர். இரவில் கடைகள் செயல்பட அரசு அனுமதித்தாலும், போலீசார் அனுமதிப்பதில்லை.

வணிகர்களின் குறைகளை தெரிவிக்க சென்றால், வணிகர் நல வாரிய தலைவராக உள்ள முதல்வரை சந்திக்க, அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.

வாரிய தலைவராக, பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு முன்னேறிய வணிகர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதற்காக, வணிகர் சங்கங்களின் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்களை நியமித்து விட கூடாது.

பிரச்னை


வணிக அனுபவம் உள்ள வணிகரை, தலைவராக நியமிக்கும் பட்சத்தில், அவர் மாவட்ட வாரியாக சென்று, வணிகர்களின் குறைகளை கேட்டறிந்து, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.

அதற்கு ஏற்ப புதிய கொள்கைகளை வகுக்கவும், திட்டங்களாக அறிவிக்கவும், அரசுக்கு உதவியாக இருக்கும்.

இதனால், வணிகர்கள் பயன் பெறுவர்; அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். எந்த நேரத்திலும் தலைவரை சந்தித்து, பிரச்னைகளை தெரிவிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us