ADDED : ஏப் 18, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் எப்போதும் இல்லாத வகையில், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,920 ரூபாய்க்கும், சவரன் 71,360 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம் 110 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 8,945 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 71,560 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விரைவில் சவரன், 1 லட்சம் ரூபாயை தொடுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

