sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஞானிகளின் உபதேசங்கள் வழியாக ஞானம் அடையலாம்'

/

'ஞானிகளின் உபதேசங்கள் வழியாக ஞானம் அடையலாம்'

'ஞானிகளின் உபதேசங்கள் வழியாக ஞானம் அடையலாம்'

'ஞானிகளின் உபதேசங்கள் வழியாக ஞானம் அடையலாம்'


ADDED : மே 06, 2025 05:34 AM

Google News

ADDED : மே 06, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சுவாமி பரமார்த்தானந்தரின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, கோவை பாரதீய வித்யா பவன் அரங்கில், நேற்று நடந்தது.

இதில், சுவாமி பரமார்த்தானந்தர் பேசியதாவது:


நமக்கு விழித்திருக்கும் நிலை, துாங்கும் நிலை இவை இரண்டுக்கும் இடையில் கனவு நிலை என, மூன்று நிலைகள் உண்டு. கனவு நிலையில் இருக்கும் ஒருவர், தான் கனவில் காண்பதை உண்மை என்று நம்புகிறார்.

அதே நபர் விழித்த பிறகு, நாம் கண்டது உண்மையல்ல; கனவு என்று உணர்கிறார். உறங்கும் போது வந்த கனவை உண்மை என்று நம்பியவர், விழித்த பிறகு அது உண்மையல்ல என்று நம்புகிறார். அப்படி என்றால் விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் அடுத்து, இன்னொரு நிலை இருக்கிறது என்று சாஸ்திரம் சொல்கிறது.

விழிப்பு, ஆழ்ந்த உறக்கம், கனவு ஆகியவை, அறிவின் பண்புகளாகும். அவை குணங்களால் ஏற்படுகின்றன. ஆன்மா அவற்றிலிருந்து வேறுபட்டது. அது என்னவென்று நமக்கு தெரியாது, பகவானுக்கு தெரியும். பகவானின் அருளை பெற்ற ஞானிகளுக்கு தெரியும். ஞானிகளின் உபதேசங்கள் வழியாக, நாம் அந்த ஞானத்தை அடைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us