sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'2ஜி' வழக்கு விசாரணையில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்: அண்ணாமலை 'பகீர்'

/

'2ஜி' வழக்கு விசாரணையில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்: அண்ணாமலை 'பகீர்'

'2ஜி' வழக்கு விசாரணையில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்: அண்ணாமலை 'பகீர்'

'2ஜி' வழக்கு விசாரணையில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்: அண்ணாமலை 'பகீர்'

1


ADDED : ஜன 18, 2024 01:16 AM

Google News

ADDED : ஜன 18, 2024 01:16 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், '2ஜி' அலைக்கற்றை ஊழல் வழக்கில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க., பைல்ஸ்' பாகம் மூன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார்.

அதில், 2ஜி வழக்கு தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் உரையாடல் இடம்பெற்றிருந்தது.

நேற்று, மூன்றாம் பாகத்தின் இரண்டாவது ஆடியோவை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'2ஜி' விசாரணையின் போது, சி.பி.ஐ., விசாரணையை தி.மு.க., எப்படி கையாண்டது என்பது பற்றிய உண்மையை ஆதாரங்களுடன் வெளியிடும் எங்கள் முயற்சியே இந்த ஆடியோ பதிவு. அடுத்தடுத்தும் அதிர்ச்சியளிக்கும் பல ஆதாரங்கள் அம்பலத்துக்கு வரும்.

தி.மு.க., பைல்ஸ் பாகம் - 3ன் இரண்டாவது ஆடியோவில், தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜா, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் இடையேயான உரையாடல் பதிவு இடம் பெற்றுள்ளது.

2ஜி வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளி.

வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்ய சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2ஜி விசாரணயை இப்படி தான் நடத்தியது.

ஊழலை மறைக்க நடத்தப்பட்ட செட்டப் நாடகங்கள் இத்துடன் முடிவதில்லை; தொடர்ந்து வெளிவரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆடியோவில் ஆ.ராஜா, ஜாபர் சேட் உரையாடல் விபரம்:

ராஜா: எங்கே சார் இருக்கீங்க.

ஜாபர்சேட்: சார் சொல்லுங்க.

ராஜா: ஒண்ணும் இல்லை. நல்ல செய்தி தான், நல்லா போயிட்டிருக்கு.

ஜாபர்சேட்: வெரி குட் சார்.

ராஜா: அவர்கள் எல்லாம் வந்து போயிட்டாங்க. அவர்களே அதை ஒருங்கிணைத்து விட்டனர்.

ஜாபர்சேட்: சரிங்க சார்.

ராஜா: அவர்கள் பிரச்னையை நன்கு கண்காணித்தனர்.

ஜாபர்சேட்: நாம சொன்ன பிரச்னைகளா?

ராஜா: நம்ம பிரச்னைகள் எல்லாம் வராமா பார்த்துக்கறேன்னாங்க. வேற ஒரு அரெஞ்மென்ட்ல. நேற்று ஒருத்தர், 'ஜாயின்' பண்ணார்ல அவர்கிட்ட சொல்லி.

ஜாபர்சேட்: நேற்று யார் சார் ஜாயின் பண்ணாங்க.

ராஜா: அந்த அமைப்புக்கு தலைமை.

ஜாபர்சேட்: ஏபி. ஆமா, ஆமாம்...

ராஜா: நம்மாளுங்க வச்சு, பாம்பே ஆளுங்க நம்மாளுங்க வச்சு, ஆழ்வார்பேட்டையில் எதெல்லாம் வர வேண்டும், எதெல்லாம் வரக்கூடாது பார்மாலிட்டி போட்டு.

ஜாபர்சேட்: சரிங்க சார்.

ராஜா: கேள்வி கேளுங்க, ஆனால் கடுமையாக கேட்கக்கூடாது.

ஜாபர்சேட்: சரிங்க சார்

ராஜா: அதுமாதிரி முடிச்சுட்டாங்க

ஜாபர்சேட்: சரிங்க சார். வெரிகுட். யார் பேசுனாங்க.

ராஜா: ஸ்வான், யுனிடெக்.

ஜாபர்சேட்: அவங்க ரெண்டு பேரும்.

ராஜா: ரெண்டு பேரும் இப்ப நேரா வந்து, 'பென்ஸ்' காரில் வந்து பார்த்துட்டு, போயிட்டாங்க.

ஜாபர்சேட்: சரிங்க சார்.

ராஜா: ஒன்னுமில்லைனு நாங்க சொல்லிட்டோம், கவலைப்பட வேண்டாம்னு. ஒவ்வொன்றாக கேட்டனர். எங்களை 'அப்ரூவர்' ஆக்கிடுறேன். ஏதாவது சொல்ல முடியுமான்னு கேட்டனர்.

ஜாபர்சேட்: சார்...

ராஜா: அதனால் என் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்றால், ஹரி சால்வேவை வைத்து கொண்டுள்ளனர்.

ஜாபர்சேட்: கொடுத்து இருக்காங்க.

ராஜா: ஹரி சால்வே டேக் ஓவர் செய்து, இவங்க பக்கம் சொல்ல வேண்டியதெல்லாம், ராஜாவை எப்படி தெரியும், அமைச்சரை எப்படி போய் பார்த்தீங்கனு எல்லாம் சொல்லி.

ஜாபர்சேட்: அந்த காப்பி மட்டும் கிடைச்சா நமக்கு.

ராஜா: நான் காப்பி வாங்க சொல்றேன்.

ஜாபர்சேட்: சரிங்க.

தைரியாமாக வீட்டிற்கே வந்துட்டு, போயிட்டாங்க.

ராஜா: அவ்வளவு தான்.

ராஜா: அவர்கள், வேறு ஆபரேட்டர்கள் வாயிலாகவும் வேலை செய்றாங்க.

ஜாபர்சேட்: நல்லது சார், சரியாக இருக்கும்.

ராஜா: யுனிடெக், ஸ்வான் இருக்குல்ல.

ஜாபர்சேட்: ஆமாம் சார்

ராஜா: டேட்டா கான், வீடியோகான் இருக்குல்ல, அவர்களிடமும் இதை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. அதற்கு பின், எனக்கு கேள்விகள் கொடுப்பாங்களாம், இல்லைன்னா ஜென்டிலா கூப்பிடுவாங்களாம்.

ஜாபர்சேட்: அவ்வளவு தான் பார்த்துக்கலாம் சார். அதோடு முடிஞ்சது

ராஜா: அவர்கள், வெளிநாட்டிற்கு கூட போகவில்லையாம்; அவர்கள், எடிசாலாவிற்கு செல்ல விரும்புவதாக சொன்னார்கள்.

இவ்வாறு அந்த உரையாடல் பதிவாகி இருக்கிறது.






      Dinamalar
      Follow us