sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்; 6 பேருக்கு ஆயுள் கால சிறை தண்டனை: ஸ்ரீவி., விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

/

 பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்; 6 பேருக்கு ஆயுள் கால சிறை தண்டனை: ஸ்ரீவி., விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

 பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்; 6 பேருக்கு ஆயுள் கால சிறை தண்டனை: ஸ்ரீவி., விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

 பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்; 6 பேருக்கு ஆயுள் கால சிறை தண்டனை: ஸ்ரீவி., விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : நவ 29, 2025 12:48 AM

Google News

ADDED : நவ 29, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பலாத் காரம் செய்த வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், கல்லுாரி மாணவர் உட்பட 6 பேருக்கு ஆயுள்கால சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் 43 வயதான பெண். இவர் 2022 ஆக.,22ல் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு மதியம் ஊருக்கு தனது நண்பர் முத்துச்செல்வம் என்பவருடன் காரில் திரும்பினார்.

கோவிலாங்குளம் ஓட்ட கண்மாய் அருகே இருவரும் காரை நிறுத்தி பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், முத்து செல்வத்தை தாக்கி விட்டு அந்த பெண்ணை தாங்கள் வந்த காரில் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து 5 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டும், அசிங்கமாக படம் எடுத்தும் மிரட்டி தப்பினர்.

இச்சம்பவத்தில் கோவிலாங்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சீனிவாசன் 42, மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த பிரபாகரன் 26, விஜய் 22, ராம்குமார் 20, ஜெயக்குமார் 23, கல்லுாரி மாணவர் அழகு முருகன் 19, விருதுநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 12 பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சிறுவனை தவிர்த்து மற்ற 6 பேருக்கும் ஆயுட்கால சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார். சிறுவன் மீதான வழக்கு விருதுநகர் இளஞ்சிரார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிரபாகரன், இந்தாண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சத்திரப் பட்டி போலீஸ் ஸ்டே ஷனில் ஏட்டு பால்பாண்டியை தாக்கி ஸ்டேஷனை சூறையாடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us