sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை ஈ.சி.ஆர்.,யில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது

/

சென்னை ஈ.சி.ஆர்.,யில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது

சென்னை ஈ.சி.ஆர்.,யில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது

சென்னை ஈ.சி.ஆர்.,யில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது

43


UPDATED : ஜன 31, 2025 11:55 AM

ADDED : ஜன 31, 2025 12:39 AM

Google News

UPDATED : ஜன 31, 2025 11:55 AM ADDED : ஜன 31, 2025 12:39 AM

43


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை ஈ.சி.ஆர்., சாலையில், அதிகாலை, 2:00 மணிக்கு காரில் சென்ற பெண்களை, தி.மு.க., கொடிகட்டிய இரண்டு கார்களில் துரத்திய விவகாரத்தில், கல்லுாரி மாணவர் உட்பட 5 பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கானத்துாரை சேர்ந்த, 26 வயது பெண், தன் தோழியருடன், ஜனவரி, 25ம் தேதி, அதிகாலை, 2:00 மணிக்கு, கோவளத்தில் இருந்து தன் வீட்டிற்கு சென்றார். அவர்கள் சென்ற காரை, தி.மு.க., கொடி கட்டிய இரண்டு கார்களில் வந்த எட்டு வாலிபர்கள் பின் தொடர்ந்தனர்.இரண்டு கார்களிலும் வந்த வாலிபர்கள், முட்டுக்காடு பாலம் அருகே தங்கள் கார்களை சாலையின் குறுக்கே நிறுத்தி, பெண்கள் சென்ற காருக்கு வழி விடாமல் தடுத்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய பெண்கள், வீட்டிற்கு செல்ல வேகமாக காரை இயக்கினர். அப்போதும் விடாமல், இரண்டு கார்களில் துரத்திய வாலிபர்கள், பனையூரில் பெண் ஒருவரின் வீடு வரை சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து, கானத்துார் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

போலீசார் பெருங் களத்துார், இரும்புலியூரில் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்களை நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தனியார் கல்லுாரி மாணவர் உட்பட, 5 பேரை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். காரில் சென்ற பெண்களை, 2 கார்களில் சென்ற, 7 பேர் துரத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்துரு எங்கே?


பெண்களை துரத்திய கார் ஒன்றின் உரிமையாளர் இரும்புலியூரைச் சேர்ந்த சந்துரு, 26 என்பது தெரிய வந்துள்ளது. இவர் மீது சேலையூர், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் மோசடி வழக்குகள் உள்ளன. இவருக்கு போலீஸ்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள சந்துருவை போலீசார் தேடுகின்றனர்.

புகாரளித்த பெண்களின் விபரம் வெளியீடு

தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் கடிதம்தி.மு.க., கொடி கட்டிய கார்களில் இருந்த வாலிபர்கள், பெண்களை துரத்திய சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை வெளியிட்டது தொடர்பாக, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி, அ.தி.மு.க., பெண் வழக்கறிஞர் எஸ்.ரேணுகா தேவி, தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை, இ.சி.ஆர்., சாலையில், 25ம் தேதி அதிகாலை காரில் சென்ற பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்த வாலிபர்கள் துரத்திய காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகின. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சென்றனர். அப்போது, வழக்குப் பதிவு செய்யாமல், நள்ளிரவில் ஏன் வெளியில் வந்தீர்கள் என, போலீசார் கேள்வி எழுப்பியதாக, வீடியோ காட்சிகளும் வெளியாகின.அதன்பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, 29ம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், காரின் எண் போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன. விசாரணை நடந்து வரும் நேரத்தில், இந்த விபரங்கள் வெளியாக வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சாட்டபட்டவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள். அவர்களை காப்பாற்றும் நோக்கில், போலீசார் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.
காவல் அமைப்பு சுதந்திரமான அமைப்பு. ஆளுங்கட்சி உத்தரவுக்கு இணங்க செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. சமீப காலங்களில், தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக, பல குற்றங்கள் நடந்து உள்ளன. எனவே, பெண்களின் விபரங்களை வெளியிட்டது தொடர்பாக, நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, காவல்துறைக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us