6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; கோவைக்கு ஆரஞ்ச் அலெர்ட்: வானிலை மையம் "அப்டேட்"
6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; கோவைக்கு ஆரஞ்ச் அலெர்ட்: வானிலை மையம் "அப்டேட்"
ADDED : ஜூலை 16, 2024 01:21 PM

சென்னை: திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(ஜூலை 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஜூலை 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவையில் மிக கனமழையும், நீலகிரில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை(ஜூலை 17)
திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கோவை, நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.