பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 9 பேர் பரிதாப பலி
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 9 பேர் பரிதாப பலி
ADDED : ஏப் 13, 2024 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதியால் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பஸ் பயணிகள் 9 பேரை கடத்திச் சென்றனர். பின்னர் அந்த 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப் பகுதிகளில் பிணமாக கிடந்தனர்.
ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு பாலத்தின் அடியில் இருந்து அவர்களது குண்டுகள் துளைக்கப்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

